மட் / குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலய 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியானது 28/02/2025 ஆறுமுகத்தான் குடியிருப்பு சக்தி விளையாட்டுக் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை மாணவர்களின் கலைகளை வளர்க்க எங்கள் பாடசாலை சமூகம் முயற்சிக்கிறது.
அதன் ஒரு கட்டமாகவே ஏறாவூர் கலாசார நிலையத்தினால் நடைபெற்ற சங்கீத நிகழ்வில் எங்கள் மாணவர்கள் பங்குபற்றி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சான்றிதழ்களை பெற்றமை தொடர்பான தகவல்களே இவை.
எங்கள் பாடசாலை மாணவர்களின் விஞ்ஞான அறிவை மேம்படுத்தும் பொருட்டு எங்கள் பாடசாலை மாணவர்கள் பாடசாலை அதிபர், ஆசிரியர்களால் மட்டக்களப்பு தேசிய மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
அண்மையில் நடைபெற்ற ஆங்கில தின விழாவில் எங்கள் மாணவர்கள் பங்குபற்றி அதில் பரிசில்களையும் பெற்ற தகவல் இங்கே காட்டப்பட்டுள்ளது.
எங்களது பாடசாலை மாணவர்களின் கல்வித்தகைமையை எழுச்சிபெற செய்வதற்கு பல்வேறு கருத்தரங்குகள் பாடசாலையில் வளவாளர்களின் துணையுடன் இடம்பெற்றுள்ளது.